மீண்டும் தொலைவேனா?!
உனை அடைந்தது என் கண்கள்
ஒளியிழந்த இரவுகளின் கனவானாய்
விடியல் காண விட்டுப்போனால்
தொலைந்து போவேனோ மீண்டும்?
எண்ணங்களுக்கு தடைபோட்டாலும்
கண்களுக்கு தாழ் போடமுடியுமா?
மூச்சுமுட்டும் நெருக்கம் சொப்பனம்
ஆயினும் - பார்வைபடும் தூரம்
இங்கு சொர்க்கம் காட்டிலும் புனிதமே!
மௌனம் - அதை கலைத்து அன்பு ராகம்
பாட பேராசை கொண்டாலும்
வார்த்தைகள் வற்றிப்போக - இந்த
ஊமை உன்வசமானதேனோ?
உன்னில் நானும் - என்னில்
நீயும் தொலைந்துவிட
மெல்ல மெல்ல மனமும்
ஏங்குதே உன் சிறு பார்வைக்கு!
Comments
Post a Comment