வீரம் விளையாதோ!

கடுஞ்சொல் கேட்டு தலை

தாழ்த்தாமல் நிமிராயோ!

முடியா தருணமதில் ஓட்டம்

தவறில்லை - துரத்துவது நீயானால்.

 

அடங்க போவது இல்லை - காரணம்

அடங்கி போனதே இல்லை

அன்பு கொண்டு அகிலம் அணைத்தது

போதும் என்று தவிக்கையில் 

கட்டிப்போட்ட கரங்களோ தன்

கட்டவிழ்த்தெறிகையில் கத்தியை அணைக்கும்.

 

ஆர்ப்பரிக்கும் ஆழ் கடல் நான்

என்னுள் கலந்திட வரும் ஆற்றுநீர் நீயென

எண்ணி - நிகரிலான் உனை

புன்னகை கொண்டு அனுமதிப்பேன்.

 

நீ விதைத்ததே உன் நிலத்தில்

விளையும் - ஆனால் நெல் விளையும்

என் மண்ணில் சேர்ந்தே

விளைந்ததாம் வீரம் - அது

கொண்டு உயருவோம் ஓரிரு படி!


Comments

Post a Comment

Popular posts from this blog

கேளாய் பூங்குழலே

அவன் அருகே...

Cricket Meri Jaan...